செவ்வாய், 27 நவம்பர், 2012

எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury) :

எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - புதன் (Mercury) :
இந்த எண் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண்ணாகும். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவாக உள்ளது. மிக நன்மையும், அதிர்ஷ்டமும் தருவது இந்த எண்ணாகும். புதனின் ஆதிக்கம் வலுத்து இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக் கொடுக்கும். புதனின் எண் இல்லாதவர்களுக்கும்கூட இந்த ஆதிக்கமானது, நல்ல பலன்களைத் தரவல்லது! இதனாலேயே பெரும்பாலான எண் சோதிடர்கள், பெயர் எண் 5 ஆக வரும்படி அமைத்துக் கொடுக்கிறார்கள். மற்ற அதிர்ஷ்ட எண்களான 1, 3, 6, 9 ஆகியவைகள் (அந்தக் குறிப்பிட்ட எண்ணானது) நல்ல அமைப்புடனும், வலுவுடனும் அன்பர்களுக்கு இருந்தால் தான் நன்மை புரியும். இல்லையெனில் தீய பலன்களைக் கண்டிப்பாக கொடுத்துவிடும். உதாரணமாக 3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 24, 33, 42, 51 ஆகிய 6 எண்ணின் வர்க்கங்கள் எந்த ஒரு பலனையும் கொடுக்காது. அதுமட்டுமன்று, அவர்களை நிச்சயம் பல தோல்விகளையும் வேதனைகளையும் ஆழ்த்திவிடும்.
ஆனால் 5 மட்டும் யாருக்கும் தீமை புரியாது! சோதிட சாத்திரத்தல் நவக்கிரகங்களில் சந்திரனுக்கு மட்டும் எல்லா இராசி வீடுகளிலும் சமமாகவும், நட்பாகவும் (விருச்சிகம் தவிர) சொல்லப்பட்டுள்ளது! அதனால்தான் சந்திரனின் ஆதிக்கம் ஜாதகத்தில் பொதுவாக எல்லா இராசிகளுக்கு நன்மையான பலன்களையே கொடுக்கும். கோசார பலன்களும் சந்திரனின் நிலையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஆனால் எண்கணிதத்தில் 5ம் எண்ணே அத்தகைய ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எண் வரிசையில் 5ம் எண்ணே மற்ற எண்களுக்கும் நடுவில் அமைந்துள்ளது என்பதே இதன் சிறப்புக்கும், நற்பலன்களுக்கும் காரணம். மற்ற எண்காரர்கள் தங்களது துன்பங்களையும், துயரங்களையும் கண்டு கலங்கும்போது இவர்கள் மட்டும், அவைகளைச் சவால்களாக எடுத்துக் கொள்வார்கள். 5ஆம் எண்காரர்களின் புத்தி அதாவது அறிவு மிகவும் அற்புதமானது!

ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் (!) பிரஞ்சத்திலிருந்து இவர்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தேவர்களில் அறிவுக்கும், புத்திக்கும், செயல்திறனுக்கும் பெயர் பெற்றவர் விஷ்ணு பகவான்தான்! அவரின் முழுக்கடாட்சமும் பொருந்திய எண் இதுதான் (5 எண்).
மற்ற எண்காரர்களைக் காப்பதற்காகவே (விஷ்ணுவின் தொழில் மக்களைக் காத்தல் அல்லவா), 5ம் எண்ணின் பலம் உதவுகிறது! 9 எண்கள் வரிசையில் எந்த ஒரு கிரகத்தினருக்கும் இல்லாத ஒரு கவர்ச்சி (காந்த சக்தி) இந்த 5ம் எண் நபர்களுக்கு உண்டு! எனவேதான் இந்த எண்ணைக் காந்த எண் அல்லது ஜனவசியம் நிறைந்த எண் என்று கூறவாக்£ள். காந்தமானது, எந்த அளவு இரும்பினையும், எளிதாக இழுத்து விடும் தன்மை உடையது. அதேபோன்றே, மக்களைக் கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவரும் இலர். இவர்களுக்கு அடுத்த நிலையில்தான் 6ம் எண்காரர்கள் உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கும் ஜனவசியம் இயற்கையாக உண்டு!

இவர்களது பேச்சில் கேலியும் (அடுத்தவ¬ப் புண்படுத்தாமல்) கிண்டலும், சிரிப்பும் கலந்திருக்கும். எத்தகைய நபர்களைச் சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை (Presence) அவர்களுக்குச் சீக்கிரம் உணர்த்திவிடுவார்கள். பல வருடகாலம் நண்பர்களாக நீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், கவர்ச்சியும், நட்புப் பலமும் இந்த 5 எண்காரர்களுக்கு உண்டு. மேலும் இவர்களுக்கு காரில், ரயிலில், விமானத்தில், அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் எதிர்பாராத நண்பர்களும், அவர்களின் மூலம் நட்பு மற்றும் பரஸ்பர உதவியும் எளிதில் இவர்களுக்குக் கிடைத்துவிடும். எப்போதும் எடுப்பாகவும், அழகாகவும், ஆடைகளையும், அழகு சாதனங்களையும் அணிந்து கொள்ளும் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமையின் மூலம் விரைந்து உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள். இவர்கள் சாப்பிடுவதில் வேகமாக இருப்பார்கள். பேச்சிலும் நடையிலும் வேகம் உண்டு! பார்வைக்கு எளிமையாக இருந்தாலும் அரசர்களையும் கவர்ந்து விடுவார்கள்.

பிறர் முறையாகக் கணக்குகள் எழுதி வைத்துக் கொள்ள நினைக்கும் விபரங்களையும்கூட இவர்கள் மனதிலேயே நிலையாக வைத்துக் கொள்ளவும். விரும்பிய போது அவைகளை சரியாக எடுத்துக்காட்டியும் சொல்லுவார்கள். எப்போதுமே பெரிய மனிதர்களின் ஆதரவு இவருக்கு உண்டு.
தங்களது சொந்தப் படைப்புக்களைவிட அடுத்தவர்களின் கருத்துக்களையும், விஷயங்களையும் தொகுத்து அவைகளை ஆராய்ந்து முடிவுக்கு வரும் அறிவுத் துறைகளில் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள். ஒரே சமயத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்துவம் அஷ்டாவதானிகள் இவர்கள்தான். புகழ்பெற்ற உலகக் கவிஞர் ஷேக்ஸ்பியர், மெஸ்மரிசம் கண்டுபிடித்த மெஸ்மர் போன்றவர்களெல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்களே!
இவர்களின் தொழில்கள்
எழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். பேனா நண்பர்கள் அதிகம் உடையவர்கள். அரசியல்துறையிலும், அதிர்-ஷ்டம் உடையவர்கள். இவர்களது பேச்சிலும் விவாதங்களிலும் அரசியல் கலப்பு அதிகமாக இருக்கும். அறிவியல் துறைப் பணிக்கும் (Science), கலைத்துறை, சோதிடம், கணிதம் போன்ற துறைகளும் ஏற்றவை! நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களாக புகழ்பெறுவார்கள்.
இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். (Any Business) ஜனவசியம் நிறைந்தவர்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். தரகர்களாகவும் (Brokers) கமிஷன் முகவர்களாகவும் மிகவும் புகழ் பெறுவார்கள். பிரயாண முகவர்களாகவும் (Travel Agents) நன்கு சம்பாதிப்பார்கள். இருப்பினும் ஒரு தொழிலை நன்கு செய்து கொண்டிருக்கிற போது, இன்னொரு தொழில் செய்தால் இதைவிட நன்றாக இருக்குமே என்று யோசிப்பார்கள். பின்பு இதை நடுவில் விட்டுவிட்டு, புதிய தொழிலில் துணிந்து இறங்கி விடுவார்கள்! இதைப்போன்று அடிக்கடி செய்யும் தொழில்களை, வியாபாரங்களை மாற்றக்கூடாது. ஆனால் தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழில்களில் புதுமையைப் புகுத்தி வெற்றி அடையலாம்.
உலகத்தின் நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்தும் தூதுவர்களாக (Ambassadors) நன்கு விளங்குவார்கள். வான ஆராய்ச்சி, செய்தி பரப்புத் துறைகள் ஆகியவையும் இவர்களுக்கு வெற்றி தரும். பொது மக்கள் தொடர்பு சம்பந்தமான (P.R.O) தொழில்களிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.
இவர்களது திருமண வாழ்க்கை
இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே. குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
இவர்களது நண்பர்கள் / கூட்டாளிகள்
பொதுவாக மற்ற எண்காரர்கள் அனைவரும் இவர்களுக்கு நண்பர்களே! குறிப்பாக 9, 1, 6 தேதிகளில் பிறந்தவர்கள் இவர்களுடன் மிகவும் அதிகமாகப் பழகுவார்கள். இவர்கள் யாருடனும் கூட்டுத் தொழில் சேர்ந்து செய்யலாம். மற்ற எண்காரர்களை, அனுசரித்துச் சென்று, வெற்றி பெற்று விடுவார்கள்.

இவர்களது நோய்கள் ...
பொதுவாக இவர்கள் அதிகமாகச் சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அமைதிக் குறைவு, மனஇறுக்கம் (டென்ஷன்) மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். நரம்பு பலவீனமே அதிகமாகப் பாதிக்கும். அடிக்கடி ஏதாவது நரம்புகளில் வலி ஏற்படும். சிறுவயதுகளில் காக்கை வலிப்புப் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
எனவே இவர்கள் முன்பு சொன்னபடி நல்ல தூக்கம் நல்ல உணவு ஆகியவைகளைக் கடைப்பிடித்தால், பல நோய்களைத் தவிர்த்துவிடலாம். சிற்றின்ப இச்சைகளை ஓரளவு குறைத்துக் கொண்டால், நரம்பு பலம் கூடும். கடுமையான நிலைகளில் நரம்புகளின் பாதிப்பால் பக்கவாதம், ஒருபுறம் நரம்புகள் சுருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.
எனவே இவர்கள் உணவில் அதிகமாகப் பருப்பு வகைகள் தானியங்கள் ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புதன் யந்திரம் & புதன் & 24
9 4 11
10 8 6
5 12 7
புதன் மந்திரம் & புதன் & 24
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம்புதம் பிரணமர்மயஹம்
எண் 5. சிறப்புப் பலன்கள்
9 எண்களிலும் 5 தான் அனைவராலும் விரும்பப்படுகிறது! காரணம் 5ம் எண்தான் மற்ற 9 எண்களுக்கும் நடுவில் உள்ளது! இந்த எண்ணே மற்ற அனைத்து மக்களையும் (எண்களையும்) ஈர்க்கும் சக்தி மிகுந்த எண்ணாகும்.
எனவே, இவர்கள் எளிதில் அனைவரிடமும் நட்புக் கொண்டு விடுவார்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லும் இயல்பினர். அறிவு என்கிற அற்புதத்தின் விளக்கம் இவர்கள் தான். புதியதாக எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும், அதை வாழ்வில் உடனடியாக பயன்படுத்தி கொள்ளும் திறமையும் உண்டு. எந்த வகையான சோதனைகளையும், சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார்கள். தன்னம்பிக்கை மிகுந்தவர்கள்.
மற்றவர்களைவிட அறிவுத் திறனும், திறமையும் உண்டு! இவர்கள் நெளிவு, சுழிவுகள் மிகத் தெரிந்தவர்கள். சீக்கிரமாக, அதுவும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியிடன்தான் எந்தத் தொழிலிலும் ஈடுபடுவார்கள். அதே போன்று இலாபங்களையும் அடைவார்கள். புதிய முயற்சிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். நணடம் வந்தபோதும் இவர்கள் கலங்கமாட்டார்கள். மிகுந்த சிந்தனைகள் செய்பவர்களாதலால் நரம்பு பலவீனம் அடையும். எனவே, சில சமயங்களில் அதிகமான வேலை செய்யும் போது, எளிதில் எரிச்சலும் கோபமும் கொள்வார்கள். எத்துறையிலும் வேகம், வேகம் என்று செயலாற்றுபவர்கள் இவர்கள்தான். பிறரைத் தூண்டி விட்டு வேகமாக எந்த வேலையையும் மிரட்டி வாங்கி விடுவார்கள். உடல் உழைப்பில் நாட்டம் குறைவு! ஆனால் மூளை உழைப்பில் சிறந்த விளங்குவார்கள். மகாவிஷ்ணுவைப் (புராணங்களில்) போன்ற திறமையும், புத்திசாலித்தனமும் உண்டு!

நிறையப் பணம் கிடைப்பதென்றால், தீய வழிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். ஆனால் எப்படியாவது தண்டனையிலிருந்து தங்களது புத்தியால் தப்பித்துக் கொள்வார்கள். இவர்களைப் புகழ்ந்தால் அப்படியே மயங்கி விடுவார்கள். எனவே, இவர்களைப் புகழ்ந்தே மற்றவர்கள் தங்களது செயல்களை இவர்களிடம் செய்து கொள்ளலாம். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிக எளிதில் தீர்வு சொல்லி விட்டுவார்கள். டாக்டர், வியாபாரிகள், பொருள் ஏஜெண்டுகள் போன்று பணம் சம்பாதிக்கும் தொழில்களிலேயே இவர்களது எண்ணம் செல்லும். வெளிநாடு, வெளியூர் செல்வதென்றால், உடனே புறப்பட்டு விடுவார்கள். தங்களது பேச்சிலும், முடிவு எடுப்பதிலும் வேகமாகச் செயல்படுவார்கள். மற்றவர்களுக்குப் புரியவில்லையென்றால் கோபம் எளிதில் வந்துவிடும். அதிக உழைப்பும் ஓயாத அலைச்சலு ஆற்றலும், புத்தி சாதுர்யமும் அதிகம். சூதாட்டம், பந்தயம், புரோக்கர் தொழில் மூலம் பொருள் பணம் குவிக்கும் யோகம் உண்டு.
காதல் விஷயங்களில் ஈடுபாடு உண்டு. காதலிப்பவரையே மணக்கும் தைரியமும், பிடிவாதமும் உண்டு. வசதியான மனைவியையே தேடுவார்கள். எவ்வளவு பெரிய காரியமானாலும் பயமோ, தயக்கமோ இன்றித் துணிந்து ஈடுபட்டு அதை வெற்றியாக மாற்றிக் காட்டுவார்கள்.
5 எண்ணின் பலம் குறைந்தவர்கள் தீய காரியங்களில் துணிந்து இறங்குவார்கள். பிறரை வஞ்சித்தல், பொய் சாட்சி சொல்லுதல், ஏமாற்றிப் பிழைத்தல், போர்ஜரி போன்றவற்றில் ஈடுபட்டுக் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பார்கள். அரசாங்கப் பணிணைவிடச் சொந்தத் தொழிலே சிறப்புத் தரும். கூட்டு எண்கள் ஒத்து வந்தால் மட்டுமே அரசாங்கப் பணி சிறப்புத் தரும். இந்த எண்காரர்களை வேலைக்கு வைத்து முதலாளிகள் லாபம் சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் ஜனவஸ்யம் நிறைந்தவர்கள். எனவே, இவரைச் சுற்றிலும் எப்போதும் மக்கள் இருந்த கொண்டே இருப்பார்கள்.
ஒருவிதக் குருட்டுத் தைரியம் இவர்களுக்கு மனதில் இருந்து கொண்டே இருக்கும். புதிய சாதனைகளை விரைந்து செய்ய வேண்டும் என்ற விருப்பம் நிறைந்தவர்கள். அடுத்தவர்களின் கருத்துப்படி இவர்கள் நடந்தால் தோல்விகள்தான் அதிகமாகும். இவர்களுக்கு இறைவனின் அருளால், திடீர் யோசனைகள் அல்லது ஞானோதயம் ஏற்படும். அதன்படி இவர்கள் செயலாற்றினால் வெற்றி நிச்சயம். இவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாங்கள் செய்யும தொழிலை அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடாது. நிரந்தரமான ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, அதில் புதிய வழிமுறைகளையும், புதுமையையும் புகுத்தி வெற்றி பெற வேண்டும். ஆழம் தெரியாமல், ஒன்றில் இறங்கக் கூடாது. செய்யும் தொழிலைப் பிடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு, அடுத்த தொழிலில் இறங்கக்கூடாது.

இவர்கள் இரவில் நெடுநேரம் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் இரவில் தூக்கம் குறையும். மனச்சோர்வுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும். எனவே, தினமும் 6 முதல் 8 மணி நேரம் தூங்குவதைப் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். தியானம், உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு, மனதைச் சலனமில்லாமல் வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். பின்பு உடல் நலம் தானே வரும். சுறுசுறுப்பும், வேகமும், இலாப நோக்கும் இவர்கள் கூடப்பிறந்தவை. எனவே, வியாபாரம், கமிஷன் தொழில். டிராவல் ஏஜெண்ட்ஸ் விற்பனைப் பிரதிநிதிகள், அரசியல் போன்ற மக்கள் தொடர்புத் தொழில்கள் மிக்க நன்மை தரும்.
உடல் அமைப்பு/ உடல் நலம்
சற்றுச் சதைப்பிடிப்பான உடல் அமைப்பு அமையும். நடுத்தரமான உயரமும், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான முகமும், கண்களும் உண்டு. நிமிர்ந்த பார்வையும், வேகமான நடையும் உண்டு.
அதிர்ஷ்ட தினங்கள் Lucky Dates
ஒவ்வொரு மாதமும் 5, 14, 23 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக அதிர்ஷ்டமானவை. தே போன்று கூட்டு எண் 5 அல்லது 9 வரும் தினங்களும் அதிர்ஷ்டமானவையே!
இவர்களுக்கு மற்ற அனைத்து எண்காரர்களும் உதவுவார்கள். இருப்பினும் 5, 9 எண்காரர்கள் இவர்களுக்கு மிகவும் நன்மை செய்வார்கள்.
அதிர்ஷ்ட இரத்தினம்
இவர்களுக்கு அதிர்ஷ்ட இரத்தினம் வைரம் எனப்படும். DIAMOND ஆகும். இந்தக் கற்களில் தரமான கற்கள் (ORIGINAL) கிடைப்பது அரிதாக உள்ளது. ZIRCON எனப்படும் கற்களும் இவர்களுக்குச் சிறந்த பலன்களையே அளிக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள் Lucky colours சாம்பல் நிறம் (GREY) மிகவும் ஏற்றது. அனைத்து இலேசான வண்ணங்களும் ஏற்றவையே. (LIGHT COLOURS) மினுமினுக்கும் உடைகளும், மினுமினுக்கும் வண்ணங்களும் நன்மையே புரியும்.
கறுப்பு, சிவப்பு, பச்சை போன்ற ஆழந்த (DARK) வண்ணங்களை நீக்கிக் கொள்ளவும்.
முக்கியக் குறிப்பு
இவர்களுக்கு நரம்புச் சக்தி குறைவு. எனவே குழந்தைச் செல்வம் தடைப்படும். மனைவியின் எண்களில் 5 எண் வந்தால் குழந்தைச் செல்வத்தைக் குறைத்து விடும். எனவே மனைவியைத் தேர்வு செய்வதில், குழந்தைச் செல்வம் உள்ள எண்களாகத் தேர்வு செய்து கொள்ளவும். குடும்பத்தில் தங்களது வேகமான பேச்சையும், செயல்களையும் குறைத்துக் கொண்டால், இன்ப வாழ்க்கை அமையும். உடல் உழைப்பிலும் சற்று ஈடுபட வேண்டும். அதுவே உடல் நலத்திற்கு உகந்ததாகும்.
5&ஆம் தேதி பிறந்தவர்கள்: புதன் கிரகத்தின் முழு அம்சம் பெற்றவர்கள். நல்ல தெய்வீக வாழ்க்கை அமையும். அறிவும், தெளிவும் உண்டு. இவர்கள் மற்றவர்களை மதிப்பவர்கள். அழகான தோற்றம் உடையவர்கள். இவர்களின் பேச்சிலும் நடத்தையிலும் ஒருவித ஈர்ப்புச் சத்தி உண்டு. சிறு வயது முதலே குறிப்பிட்ட இலட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். மற்றவர்களை ஏமாற்றத் தெரியாது.

14&ஆம் தேதி பிறந்தவர்கள் : 
இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டம் உடையவர்கள். பயணத்தில் சலிக்காத நாட்டம் இவர்களுக்கு இருக்கும். பலர் புகழ்பெற்ற வியாபாரிகளாக இருப்பார்கள். இருந்தாலும் இவர்களது வாழ்க்கையில் அடிக்கடி விபத்துகள், சரிவுகள் ஏற்படும். இறைவனின் அருளால் இவர்களுக்கு துன்பங்களைச் சமாளிப்பதற்கான சூழ்நிலையும், அறிவும் உருவாகும். காதல் விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், பின்பு வாழ்க்கையே கசந்துவிடும். மக்களைக் கவர்கின்ற சிறந்த எண் இது. எனவே எப்போதும் இவரைச் சூழ்ந்து 10 பேர் இருப்பார்கள். அரசியலிலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு!

23&ஆம் தேதி பிறந்தவர்கள்:
இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். குருச்சந்திர யோகம் நிறைந்தவர்கள். அரசாங்கத்தாரால் எப்போதும் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். ஓர் அரசனைப் போன்று அனைத்து வசதிகளுடனும் வாழ்வார்கள். பண்பாடும், ஒழுக்கமும் நிறைந்தவர்கள். இவர்கள் உலகத்தில் சாதனை புரியப் பிறந்தவர்கள். மக்களைக் கவர்கின்ற சக்தி நிறைந்தவர்கள். புன்னகை புரிந்தே மற்றவர்களை வென்று விடுவார்கள். இவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு மறுப்பு இருக்காது. அனைத்து மக்களின் அன்பும், ஆதரவும் கிடைப்பதால் பெரும் வியாபாரிகளாகவும் ஆன்மிகம் மற்றும் அரசியல் துறைகளில் புகழ் பெற்றதும் விளங்குவார்கள்.
எண் 5க்கான (புதன்) தொழில்கள்
இவர்கள் கதை, கவிதை, நாடகம் எழுதல், சிற்பம் செதுக்குதல், ஜோதிடம் பார்த்தல், காகிதம், மொச்சை, பயிறு, மஞ்சள், முத்து, வெற்றிலைப் பாக்கு கொடி வகைகள் போன்ற வியாபாரங்கள்/ தொழில்கள் நன்மை பயக்கும். கல்வித் துறை, கணக்குத் துறை, தபால் துறை போன்றவற்றில் பணி செய்தல், Accountants, சொற்பொழிவாற்றுதல், புரோகிதம் செய்தல் போன்றவையும் ஒத்து வரும். ஜோதிடம் போன்ற சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபடுவார்கள். சிலர் நாட்டின் தூதுவர்களாகவும் இருப்பார்கள்.

பொதுவாக அனைத்து வியாபாரங்களும் இவர்களுக்கு நன்மை தரும். ஆனால் பொருட்கள், கருவிகள் உற்பத்தித் துறைகளில் இறங்கக்கூடாது! Marketing மற்றும் Broker போன்ற தொழில்கள் நன்மை தரும். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் மற்றவர்களிடம் வேலை செய்யும்போது, முதலாளிகளுக்கு பல ஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள். அதனால் முதலாளிகளால் மிக விரும்பப்படுவார்கள். பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்வார்கள்! அடிக்கடி தொழிலை மாற்றும் இயல்பினர். சம்பள உயர்வே இவர்களது நோக்கம்!
ஏதாவது உபதொழில் .. செய்து வருமானத்தை பெருக்குவதில் நாட்டமாக இருப்பார்கள். ... விற்பனைப் பிரதிநிதிகள் போன்றவற்றிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.

அறிவியல் துறைப் பணிகள், கலைத்துறை, பேச்சாளர்கள் போன்ற துறைகளும் நன்கு அமையும். இவர்கள் அறிவினால் உழைப்பவர்கள்! மற்றவர்களை வசியம் செய்து தங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், வியாபாரிகள் இந்த எண்ணில் பிறந்திருப்பார்கள். Business Management கணிதம், செய்தி சேகரிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள்.

அரசுப் பணியாளர் இடமாற்றம், பொது மாறுதல்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் தமிழக அரசு உத்தரவு

சனி, 24 நவம்பர், 2012

The Government passed the examination in public schools ... 100 percent! : Educational attainment of the goal of the project in 2024 | பொதுத்தேர்வு: அரசு பள்ளிகளில்100 சதவீதம்தேர்ச்சி ; 2024ல் இலக்கு Dinamalar

The Government passed the examination in public schools ... 100 percent! : Educational attainment of the goal of the project in 2024 | பொதுத்தேர்வு: அரசு பள்ளிகளில்100 சதவீதம்தேர்ச்சி ; 2024ல் இலக்கு Dinamalar

  சம்பள மோசடி தலைமை ஆசிரியருக்கு சிறை Dinamalar

ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி. |

வெள்ளி, 23 நவம்பர், 2012

கணக்குப் புலிகளுக்கு கல்வி உதவித் தொகை Thanks to PUTHIYATHALAIMURAI


கணக்குப் புலிகளுக்கு கல்வி உதவித் தொகை
பொன். தனசேகரன்

கணித ஆய்வில் ஆர்வமிக்க மாணவர்களா நீங்கள்? மாதம் ரூ.16 ஆயிரம் கல்வி உதவித் தொகையுடன் பிஎச்டி படிக்க விரும்பும் பிஎஸ்சி, பி.டெக், பி.இ, எம்எஸ்சி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

அறிவியல், பொறியியல் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாடம் கணிதம். கணிதப் பாடத்தைக் கற்றுத் தர நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பல கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. கணிதப் பாடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசின் அணுசக்தித் துறையினால் தொடங்கப்பட்டதுதான் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்மேட்டிக்ஸ். மும்பையில் 1983ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம், கணிதம் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. 2013-14 கல்வி ஆண்டில் கணிதப் பாடத்தில் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பில் சேருவதில் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் படிக்க வாய்ப்பையும் வழங்குகிறது இந்த அமைப்பு.

பிஎஸ்சி, பி.டெக், பிஇ, எம்எஸ்சி பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பிலிருந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, நல்ல மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிஎஸ்சி ஆனர்ஸ் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளில் மாதம் ரூ.16 ஆயிரம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் இதர படிப்புச் செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். தகுதியுடையவர்களுக்கு மத்திய அரசின் விதிமுறைப்படி, வீட்டு வாடகை அலவன்ஸ் வழங்கப்படும். மொத்தம் நான்கு ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் படிப்புத் திறனைப் பொருத்து, இந்த உதவித் தொகை அடுத்த ஆண்டுக்கு நீட்டிக்கப்படும். தகுதியுடையவராக இருந்தால் இந்த உதவித் தொகை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணிதத்தில் பிஎச்டி படிக்க பதிவு செய்ய வேண்டும். எந்தக் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேருகிறாரோ, அந்தக் கல்வி நிறுவனம் மூலம் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் நேஷனல் போர்டு ஆஃப் ஹையர் மேத்மேட்டிக்ஸ் நடத்தும் எழுத்துத் தேர்வை எழுத வேண்டும். புதுதில்லி, சண்டீகர், அலகாபாத், இந்தூர், ஜபல்பூர், கோவா, மும்பை, புனே, வல்லபாவித்யாநகர், புவனேஸ்வரம், குவாஹாத்தி, கொல்கத்தா, ராஞ்சி, ஷில்லாங், பெங்களூரு, சென்னை, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். வருகிற ஜனவரி மாதம் 19-ம் தேதி இத்தேர்வு நடைபெறுகிறது. கணிதத்தில் முதுநிலைப் படிப்பு நிலையில் உள்ள பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டரை மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் குறுகிய விடைகளை அளிப்பதற்கான கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அதில் தகுதி பெறும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு வினாத்தாள்களை நேஷனல் போர்டு ஆஃப் ஹையர் மேத்மேட்டிக்ஸ் இணையதளத்தில் பார்த்து, இத்தேர்வு வினாக்கள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். சென்னையில் உள்ள மேட் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட், அலகாபாத்தில் உள்ள ஹரீஷ் சந்திரா ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், புனேயில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் ஆகிய கல்வி நிறுவனங்களில் பிஎச்டி படிக்க விரும்பும் மாணவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேஷனல் போர்டு ஆஃப் ஹையர் மேத்மேட்டிக்ஸ் கல்வி நிலையத்துக்கு அனுப்பக் கூடாது. ஐந்து மண்டலங்களில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். பிஎச்டி ஆய்வுக்கான இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்களுக்காக பத்திரிகையிலும் இணையதளத்திலும் விளம்பர அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி, படிப்பு விவரங்கள், தேர்வு எழுத விரும்பும் இரு மையங்கள் போன்று விளம்பர அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தில் உரிய விவரங்களுடன் தனித்தாளில் பூர்த்தி செய்து புகைப்படத்தையும் ஒட்டி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்ப உறையில் ‘NBHM Ph.D Scholarship’ என்று குறிப்பிட வேண்டும்.

பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த (மண்டலம்-5) மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்:

Prof.S. Kesavan
Institute of Mathematical Sciences
CIT Campus
Taramani
Chennai - 600 113.
email: kesh@imsc.res.in

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 30-ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். கணக்கில் புலிகளாக விளங்கும் மாணவர்கள் உதவித் தொகையுடன் பிஎச்டி படிக்க நல்ல வாய்ப்பு இது. ஆர்வமிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: www.nbhm.dae.gov.in

வெள்ளி, 16 நவம்பர், 2012

B. Ed., M.. Ed., Courses for teachers to plan quality at the entrance to | பி.எட்., எம்.எட்., படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு 

Funny English Teacher

Math trick. Use box to solve math problem

Two Negatives Can Make a Positive.MOD

Multiplying Polynomials 3

அரசு பள்ளிகளில் 5,000 ஆய்வக உதவியாளர்கள் விரைவில் தேர்வு

ஞாயிறு, 11 நவம்பர், 2012

Monthly Calendar 2012 - Free Monthly Calendar | Monthly Calendar Events | Monthly Calendar Special Days | Montly Calendar Festival Days

Monthly Calendar 2012 - Free Monthly Calendar | Monthly Calendar Events | Monthly Calendar Special Days | Montly Calendar Festival Days

Myspace Neon Flash Comments

1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க உத்தரவு Dinamalar

 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைதோற்றுவிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசின் செய்திக்குறிப்பு: அரசு மேல்நிலை பள்ளிகளில், 11 மற்றும், 12ம் வகுப்புகளில் உள்ள, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக, அரசுக்கு ஆண்டுக்கு, 64 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.தற்போதுள்ள, 4,393 பள்ளிகள் மற்றும் புதிதாக துவக்கப்பட்ட, 544 பள்ளிகள் என, மொத்தம், 4,937 பள்ளிகளுக்கு, தலா ஒரு ஆய்வக உதவியாளர் வீதம், 4,937 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதில், 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மீதமுள்ள, 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பவும், 1,764 பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு, ஒரு இளநிலை உதவியாளர் வீதம், பணியிடங்களை உருவாக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்காக, அரசுக்கு, 109 கோடி ரூபாய் செலவாகும். மேலும், 131 பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, ஆய்வகம் போன்ற, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு, 152.73 கோடி ரூபா# நிதி ஒதுக்கீடு செய்தும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

சூரிய ஒளி அடுப்பு' கண்டறிந்து சாதனை

சூரிய ஒளி அடுப்பு' கண்டறிந்து சாதனை

Temple News | News | Dinamalar Temple | கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் தெரியுமா?

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் தெரியுமா?

பொதுத்தேர்வு பணிகள் துவங்கின: நவ. 30க்குள் இறுதிப்பட்டியல் | Kalvimalar - News

பொதுத்தேர்வு பணிகள் துவங்கின: நவ. 30க்குள் இறுதிப்பட்டியல் |

பொதுத்தேர்வு பணிகள் துவங்கின: நவ. 30க்குள் இறுதிப்பட்டியல் | Kalvimalar - News

பொதுத்தேர்வு பணிகள் துவங்கின: நவ. 30க்குள் இறுதிப்பட்டியல் |

மாணவரே இல்லாத அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம் | Kalvimalar - News

மாணவரே இல்லாத அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம் 

அமெரிக்க மாகாண கவுன்சில் உறுப்பினராக வெற்றி பெற்ற காந்தியின் எள்ளுப் பேரன்


வாஷிங்டன்: மகாத்மா காந்தியின் எள்ளுப் பேரன் சாந்தி காந்தி அமெரிக்காவின் கான்சாஸ் மாநில சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார்.
காந்தியின் பேரனான மறைந்த காந்திலால்- சரஸ்வதி காந்தியின் மகன் சாந்தி காந்தி. அமெரிக்காவின் கான்ஸாஸ் மாநிலத்தின் 52-வது சட்டசபை தொகுதியில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் தியோடரை விட 9% வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. அப்போது மாநில சட்டசபைக்குமான தேர்தல்களும் நடைபெற்றது.

வெள்ளி, 9 நவம்பர், 2012

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy

RBI to banks: Do not reject any educational loan application | கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது: ரிசர்வ் வங்கி Dinamalar

RBI to banks: Do not reject any educational loan application | கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது: ரிசர்வ் வங்கி

To produce electricity from waste plan: tirupur corporation | குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம் Dinamalar

To produce electricity from waste plan: tirupur corporation | குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம் Dinamalar

To produce electricity from waste plan: tirupur corporation | குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம் Dinamalar

To produce electricity from waste plan: tirupur corporation | குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம் Dinamalar

ஞாயிறு, 4 நவம்பர், 2012

செய்யும் எல்லா பாவத்துக்கும் தண்டனை உண்டா?


பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்! thanks to thatstamil.com


பசங்க நல்ல மார்க் வாங்கினால் பேன்சி டிரஸ்ஸில் வருவதாக 'பிராமிஸ்' செய்த டீச்சர்!

Published: Sunday, November 4, 2012, 11:39 [IST]
 Chinese Teacher Dresses Up As Sexy Maid As Reward
ROLE MODEL TEACHER DEDICATES LIFE F...
பெய்ஜிங்: அனைவரும் டெஸ்ட்டில் பாஸ் செய்து நல்ல மார்க் வாங்கினால் பேன்சியான உடையில் வருவதாக உறுதியளித்தார் வகுப்பு ஆசிரியை. அதைக் கேட்டு உற்சாகமடைந்த மாணவர்கள் விழுந்து விழுந்து படித்து மதிப்பெண்களையும் வாங்கிக் குவித்து விட்டனர். இதையடுத்து தான் அளித்த உறுதிமொழிப்படி பேன்சி டிரஸ்ஸில் வந்து மாணவர்களை சந்தோஷப்படுத்தினார் அந்த ஆசிரியை.
சீனாவில்தான் இந்தக் கூத்து. மாணவர்களைப் படிக்க வைக்க இன்று ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர். ஆனால் சீனத்து ஆசிரியை ஒருவர் சூப்பராக யோசித்து தான் நினைத்ததை சாதித்துள்ளார். குவாங்ஸி என்ற சீன மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியை, மாணவர்களிடம், நீங்கள் அனைவரும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களை வாங்கினால், நான் வேலைக்காரப் பெண்கள் அணியும் பேன்சியான டிரஸ்ஸில் வகுப்புக்கு வருவேன் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு குஷியான மாணவர்கள், கண்டிப்பாக மார்க் வாங்குவோம் என்று உறுதியளித்தனர். சொன்னபடி படிக்கவும் செய்தார்கள். தேர்வில் அத்தனை பேருமே பாஸ், நல்ல மதிப்பெண்ணும் கூட. இதையடுத்து தான் உறுதியளித்தபடி பேன்சியான டிரஸ்ஸில் வகுப்புக்கு வந்தார் ஆசிரியை. லேசான கவர்ச்சியுடன் கூடிய அந்த டிரஸ்ஸில் ஆசிரியையைப் பார்த்த மாணவர்களுக்கு பெருத்த சந்தோஷம். பலர் தங்களது செல்போன் கேமராவில் அதைப் படம் பிடித்து பிளாக்கிலும், இன்டர்நெட்டிலும் போட்டு விட சர்ச்சையாகி விட்டது.
மாணவர்களைப் படிக்க வைக்க ஒரு டீச்சர் இப்படியெல்லாமா கூறுவது என்று சிலர் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விட்டனர். ஆனால் சிலர், ஆசிரியை தான் நினைத்ததை சாதித்துள்ளார் அல்லவா, மாணவர்களைப் படிக்க வைத்து விட்டாரல்லவா, அதைப் பாருங்கள் என்று ஆசிரியையின் செயலை பாராட்டியுள்ளனராம்.
பூபி வாலிபால் என்று சீனாவில் ஒரு படம் வந்தது. அந்தப் படத்தில் வந்ததைப் போன்றுதான் இந்த ஆசிரியையும் செயல்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. பூபி வாலிபால் படத்தில், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கைப்பந்தாட்ட அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களை சரிவர பயிற்சி கொடுக்காமல் சிரமப்படுகிறார் அதன் பெண் பயிற்சியாளர். கடைசியில் ஒரு டிரிக் செய்கிறார். நீங்கள் சரியாக ஆடி வெற்றி பெற்றால், எனது மார்புகளை உங்களுக்குக் காட்டுவேன் என்று கூறுவார். அதைக் கேட்டு வீரர்கள் உற்சாகமாகி ஆடி வெற்றி பெறுவார்கள். அதே பாணியில் இந்த ஆசிரியையும் சற்று வித்தியாசமாக உறுதியளித்து சாதித்துள்ளார் என்கிறார்கள்.
எப்படியோ படிச்சா சரிதான்...!

பதவி உயர்வு - தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஏக்கம்

பதவி உயர்வு - தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஏக்கம் | Kalvimalar - News